மேட்டுப்பாளையத்தில் மண்ணுளி பாம்பு விற்க முயன்ற 3 பேர் சிக்கினர்

மட்டை ராஜேந்திரன் என்பவரது வீட்டில் மண்ணுளி பாம்பு உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. பிடிபட்ட 3 பேரிடம் பாம்பை யாருக்கு விற்க முயற்சி நடந்தது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை.
மேட்டுப்பாளையத்தில் மண்ணுளி பாம்பு விற்க முயன்ற 3 பேர் சிக்கினர்
Published on

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எல்.எஸ். வீதியில் உள்ள ராஜன் என்ற மட்டை ராஜேந்திரன் என்பவரது வீட்டில் மண்ணுளி பாம்பு உள்ளதாகவும், அதனை 4 பேர் விற்க முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து வனத்துறையினர் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

வனத்துறையினர் வருவதை பார்த்ததும் 4 பேரும் தப்பி ஓடினர். அவர்களில் 3 பேரை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். பின்னர் பிடிபட்ட 3 பேரையும் காரமடை ரோட்டில் உள்ள வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சூலூர் பட்டணத்தை சேர்ந்த நாகராஜா (வயது 36), சரங்கர பாண்டியன் (41), திருப்பூரை சேர்ந்த அப்பாஸ் (43) என்பது தெரிய வந்தது.

தப்பி ஓடிய சேலத்தை சேர்ந்த ராஜ் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். தொடர்ந்து பிடிபட்ட 3 பேரிடம் மண்ணுளி பாம்பு எங்கு உள்ளது. அதனை யாருக்கு விற்க முயற்சி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com