தேனி அருகே ரூ.20 லட்சம் வரதட்சணை கேட்டு வங்கி ஊழியருக்கு சித்ரவதை கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

திருமணத்தி ன்போது 100 பவுன் நகை, கார், ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடு க்கப்பட்டது.மேலும் ரூ.20லட்சம் ரொக்கம், 50 பவுன் நகை கொடுத்தால்தான் சேர்ந்துவாழ முடியும் என பெண்ணை கணவர் மற்றும் அவரது குடும்பத்தி னர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி அருகில் உள்ள தாமரைநகரை சேர்ந்தவர் வினோதினி(31). இவருக்கும் மோகன்பிரகாஷ்(40) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தி ன்போது 100 பவுன் நகை, கார், ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடு க்கப்பட்டது.

திருமணத்திற்கு பிறகு பெண் வீட்டார் வழங்கிய 100 பவுன் நகை உண்மை தானா என்று சரிபார்த்து தருவதாக வாங்கிய மாமனார் ஜெயராமன், மாமியார் முருகேஸ்வரி ஆகியோர் திருப்பித்தராமல் தங்களிடமே வைத்து க்கொண்டனர். மோகன்பிர காஷ் சிறிது காலம் தனது மனைவியுடன் சென்னை யில்குடியிருந்து வந்தார்.

இவர்களுக்கு தியாமினு என்ற ஒரு பெண்குழந்தை உள்ளது. சில வருடங்கள் கழித்து மோகன்பிரகாஷ் நெதர்லாந்துக்கு வேலைக்கு சென்றுவிட்டார். வினோ தினி தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் பின்னர் மீண்டும் பெரியகுளத்தில் தங்கியி ருந்தனர்.

அப்போது ரூ.20லட்சம் ரொக்கம், 50 பவுன் நகை கொடுத்தால்தான் சேர்ந்துவாழ முடியும் என வினோதினியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தி னர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com