என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவன் உள்பட 3 பேர் மாயம்
- உத்தமபாளையம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் மாணவன் உள்பட 3 பேர் மாயமாகினர்.
- மாயமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த நந்தகுமார் மகன் தர்ணேஷ் (வயது14). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற தர்ணேஷ் திடீரென மாயமானார்.
பள்ளி வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடி பார்த்தும் கிடைக்கா ததால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த ராமசாமி மனைவி சங்கிலிமுத்தம்மாள் (67). சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி அய்யம்மாள் (70). கணவர் இறந்து விட்ட நிலையில் நோய் கொடுமை யால் பாதிக்கப்பட்டு இருந்தார். சம்பவத்தன்று அவர் திடீரென மாயமா னார்.
இது குறித்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்