என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிறுமி உள்பட 3 பேர் தூக்குபோட்டு தற்கொலை
- கடுமையான வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார்.
- வீட்டில் தனியாக இருந்தபோது மதுமிதா திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி மாரி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் மதுமிதா (வயது16). இவர் கடுமையான வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது மதுமிதா திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்திரா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாறன். இவரது மகன் சேட்டு என்கிற வெங்கடேஷ் (வயது27). கூலித்தொழிலாளியான இவருக்கு மது குடிப்பழக்கம் இருந்து வந்தது.
இதனால் சேட்டுவுக்கு அவரது மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோன்று தேன்கனிக்கோட்டை ஜெரகலட்டி பகுதியைச் சேர்ந்தவர் சூடப்பா (71). கூலித்தொழிலாளியான இவருக்கு மதுகுடிப்பழக்கம் இருப்பதால், குடும்பதகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுைடந்த காணப்பட்ட சூடப்பா நேற்று அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்