search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷவண்டுகள் கடித்து 3 பேர் மயக்கம்
    X

    விஷவண்டுகள் கடித்து 3 பேர் மயக்கம்

    • 3 பேரும் ஒரு வயலில் பருத்தி எடுக்கும் வேலைக்கு சென்றுள்ளனர்.
    • பனை மரத்தில் இருந்த விஷ வண்டுகள் பறந்து வந்து 3 பேரையும் கடித்தது.

    திருவாரூர்:

    நன்னிலம் அருகே உள்ள தென்குடி பகுதியை சேர்ந்தவர்கள் அலமேலு மங்கை (வயது54), தனலட்சுமி(65), சிவா(32). இவர்கள் 3 பேரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.

    நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு வயலில் பருத்தி எடுக்கும் வேலைக்கு சென்றுள்ளனர்.

    வயலில் பருத்தி எடுத்து கொண்டிருந்த போது, பனை மரத்தில் கூடுக்கட்டி இருந்த விஷ வண்டுகள் பறந்து வந்து 3 பேரையும் கடித்தது.

    இதில் மயக்கம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    Next Story
    ×