search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி
    X

    கோப்பு படம்.

    தேனி மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி

    • சரக்கு வாகனம், பைக் மற்றும் தனியார் பஸ் மோதி 3 பேர் பலி.
    • இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திருமலாபுரத்தை சேர்ந்தவர் முருகன் மகன் விஜய்(25). இவர் மோட்டார் சைக்கிளில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். சக்கம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் வந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதியதில் படுகாயமடைந்த விஜய் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் வழியிலேயே விஜய் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சகோதரர் அஜித் அளித்த புகாரின்பேரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து சரக்கு வாகன டிரைவர் ஆண்டிபட்டியை சேர்ந்த ராஜபாண்டியனிடம் விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார்(43). இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பணிக்கு செல்வதற்காக சின்னமனூர்- உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சரவணக்குமாரை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடி அருகே கோணம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன்(70). தேவாரம்- போடி சாலையில் கோணம்பட்டி பிரிவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பஸ் மாரியப்பன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×