என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை
- தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- தற்கொலைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே தென்பழனியை சேர்ந்தவர் செல்வக்குமார்(25). இவருக்கு திருமணமாகி 1 மகன் உள்ளார். டிரைவர் வேலை பார்த்து வந்த செல்வக்குமாருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணமாகவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த செல்வக்குமார் விஷம்குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போடி புதூரை சேர்ந்தவர் ரமேஷ்(38). லாரி டிரைவர். அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் மது குடித்ததால் வயிற்றுவலி அதிகமானது. இதனால் ரமேஷ் விஷமாத்திரையை சாப்பிட்டு மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போடி நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வருசநாடு வாழ வந்தாள்புரத்தை சேர்ந்தவர் நந்தினி. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் கருப்பசாமி என்பவரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் 1 மகன் உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக நந்தினி விஷம் குடித்து மயங்கினார். வருசநாடு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வருசநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






