search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே குடும்ப பிரச்சினையால் 3 பேர் தற்கொலை
    X

    கோப்பு படம்.

    தேனி அருகே குடும்ப பிரச்சினையால் 3 பேர் தற்கொலை

    • குடும்ப பிரச்சினைகள் காரணமாக 3 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
    • வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 40). இவர் பைப் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் நாகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. இதனால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    நாகேஸ்வரி கோபித்துக் கொண்டு திண்டுக்கல்லில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மேலும் மது குடித்து விரக்தியில் இருந்த பாண்டி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டி இறந்து விட்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி அருகே தே.லெட்சுமி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் (38). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். தேவாரத்தில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த நாகராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி அருகே அரண்மனைப்புதூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (36). கடந்த 7 வருடங்களுக்கு முன்பு அபிநயா என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×