மது, கஞ்சா விற்ற 3 பேர் கைது

ராஜி என்பவரை தாரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
மது, கஞ்சா விற்ற 3 பேர் கைது
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியில் அரசு அனுமதியின்றி மதுவை பதுக்கி விற்பனை செய்துவந்த சிக்கம்பட்டியை சேர்ந்த ராஜி (வயது 44) என்பவரை தாரமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 18 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர் .

தாரமங்கலம் அருகிலுள்ள சின்னப்பம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.அப்போது 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் திருச்செங்கோட்டை சேர்ந்த சுப்பிரமணி மகன் சூர்யா (22) சின்னப்பம்பட்டியை சேர்ந்த குமார் மகன் அருள் (20) என்பதும் அவர்கள் விற்பனைக்காக 1.2 கிலோ அளவில் 10 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் வைத்து இருந்தது தெரியவந்து. தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com