search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் புதிதாக அமைக்கப்பட்ட 3 போலீஸ் நிலையங்கள் 26-ந்தேதி திறப்பு
    X

    கோவையில் புதிதாக அமைக்கப்பட்ட 3 போலீஸ் நிலையங்கள் 26-ந்தேதி திறப்பு

    • 3 போலீஸ் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
    • தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவை வந்து புதிய போலீஸ் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார்.

    கோவை,

    கோவை மாநகரில் 15 சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர 3 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களும் உள்ளன.

    இந்தநிலையில், கோவை மாநகரில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை கண்காணிக்கவும், பதற்றம் மிகுந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை அதிகமாக்கி ரோந்து பணியை மேற்கொள்ள 3 போலீஸ் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி, கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, சுந்தராபுரம் என 3 புதிய போலீஸ் போலீஸ் நிலையங்களுக்கான இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பணியிடங்கள் குறித்த விவரங்களை டிஜிபி அலுவலகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள், 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், உட்பட 25 பேர் போலீசார், கரும்பு கடை போலீஸ் நிலையத்தில் 2இன்ஸ்பெக்டர்கள், 7 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 25 பேர் மற்றும் சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 11 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 25 பேர் என போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது குறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கரும்புக்கடை போலீஸ் நிலையம் ஆயிஷா மஹால் அருகேயும், கவுண்டம்பாளையத்தில் மின் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் வாடகை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுந்தராபுரத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்பட உள்ளது.

    இதனைத் தொடர்ந்து இந்த புதிய 3 போலீஸ் நிலையங்களும் பயன்பாட்டுக்கு வர தயார் நிலையில் உள்ளன.

    இதனைத் தொடர்ந்து வருகிற 26ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவை வந்து புதிய போலீஸ் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார்.

    Next Story
    ×