search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடை செய்யப்பட்ட 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
    X

    தடை செய்யப்பட்ட 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    • அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தம்ளர்கள், பைகள் சுமார் 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    • 2 கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    திருநெல்வேலி:

    நெல்லை மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையில் சுகாதார அலுவலர்கள் அரசகுமார், முருகேசன், சாகுல்அமீது, இளங்கோ சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் நெல்லை டவுன் பகுதிகளில் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தம்ளர்கள், பைகள் சுமார் 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். அந்த 2 கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×