வானூர் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் 23 பவுன் நகை கொள்ளை

ஜெயவரதன் சென்னை ெரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.பீரோவில் இருந்த 23 பவுன் நகையை திருடி சென்றார்.
வானூர் அருகே  ரெயில்வே ஊழியர் வீட்டில் 23 பவுன் நகை கொள்ளை
Published on

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொமல ம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயவரதன் சென்னை ெரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி விஜயலட்சுமி. . தற்போது ஜெயவரதன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் உள்ளார். விஜயலட்சுமி தனியாக கொமலம்பட்டு பகுதியில் சிறிய மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் டி.பரங்கனி பகுதியைச் சேர்ந்த கவுதம் (வயது 22) கூலித்தொழிலாளி. இவர் நேற்று கொமலம்பட்டு பகுதிக்கு வந்தார். விஜயலட்சுமி கடையில் இருப்பதை பார்த்து அவரது வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 23 பவுன் நகையை திருடி சென்றார். நகையை திருடிச் சென்ற பின்னரும் விஜயலட்சுமியின் கடையின் அருகிலேயே இருந்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த ஊர் பொதுமக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து விசாரித்தனர்.அப்போது விஜயலட்சுமியின் வீட்டில் இருந்த நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் விஜயலட்சுமி வீட்டின் அருகில் இருந்த வேப்ப மரத்தின் அடியில் மூட்டையாக கட்டி வைத்திருந்த 20 பவுன் நகையை கவுதமிடம் இருந்து மீட்டனர். மீதமு ள்ள 3 பவுன் நகையை கவுதமிடம் கேட்டதற்கு அவர் 20 பவுன் நகை மட்டும் தான் திருடினேன் என்று கூறினார். இதனால் பொதுமக்கள் கிளியனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்த கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கவுதமை மீட்டு வழக்கு பதிவு செய்து வீட்டில் மறைத்து வைத்திருந்த 3 பவுன் நகை மீட்டு விஜயலட்சுமி இடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com