

பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்துக்கு உட்பட்ட செங்கமங்கலம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நவம்பர் 22 புதன்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தாவது:-
பேராவூரணி வட்டம் ஆவணம் சரகம் செங்கம ங்கலம் கிராமத்தில் நவம்பர் 22ஆம் தேதி புதன்கிழமை நடத்தப்பட உள்ள மக்கள் நேர்காணல் முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது மனுக்களை அளித்து தீர்வு பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.