search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடலூர், விழுப்புரத்துக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடலூர், விழுப்புரத்துக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலான சிறப்பு பஸ்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
    • பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம்:, அக்.18-

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 20, 21, 22 தேதிகளில் சென்னையிலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், ஆகிய ஊர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலான சிறப்பு பஸ்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

    அதன்படி சென்னையிலிருந்து அக்டோபர் 20-ம் தேதி 200 சிறபபுப் பஸ்கள், 21-ம் தேதி 250 சிறப்பு பஸ்கள், 22-ம் தேதி 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதே போன்று ஆயுத பூஜை விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக அக்டோபர் 24-ம் தேதி 200 சிறப்பு பஸ்களும், 25-ம் தேதி 150 சிறப்பு பஸ்களும், மேலும் பயணிகளின் தேவைக்கற்ப சிறப்பு பஸ்களை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×