search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பம் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூடைகள்.

    கம்பம் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    • ஒரு வாகனத்தில் ரேசன் அரிசி மூடைகள் கடத்திச் செல்லப்பட்டது அறிந்து அதனை தடுத்து நிறுத்தினர்.
    • அரிசி மூடைகளை கடத்தி வந்த வாகனத்தையும் பிடித்து நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் கம்பம் மெட்டு வழியாக கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து பறக்கும்படை அலுவலர் முத்துக்குமார், வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். கம்பம் மெட்டு அருகே ஒரு வாகனத்தில் ரேசன் அரிசி மூடைகள் கடத்திச் செல்லப்பட்டது அறிந்து அதனை தடுத்து நிறுத்தினர்.

    ஆனால் அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் அதி வேகத்தில் சென்றனர். இருந்தபோதும் அதிகாரிகள் துரத்திச் சென்று வாகனத்தை பிடித்தனர். அதில் 2050 கிலோ பொது வினியோக திட்டத்துக்கான ரேசன் அரிசி மூடைகள் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த ரேசன் அரிசி மூடைகளை கைப்பற்றினர். மேலும் அரிசி மூடைகளை கடத்தி வந்த வாகனத்தையும் பிடித்து நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர். வாகனத்தில் வந்த 3 பேர் தப்பி ஓடியதால் அவர்களை தேடி வருகின்றனர்.

    மேலும் இந்த அரிசி மூடைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×