என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
    X

    பாளையில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டு முன்பு நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
    • மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

    நெல்லை:

    பாளையை அடுத்த சீவலப்பேரியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் பேச்சிமுத்து(வயது 19). இவர் சம்பவத்தன்று வீட்டு முன்பு நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார்(22) மற்றும் அவரது சகோதரர் சங்கரபாண்டியன்(21) ஆகியோர் பேச்சிமுத்துவை சரமாரியாக தாக்கினர்.

    பின்னர் அவர் வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

    இதுதொடர்பாக பேச்சிமுத்து அளித்த புகாரின்பேரில் சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செல்வக்குமார் மற்றும் சங்கரபாண்டியனை கைது செய்தனர்.

    Next Story
    ×