

கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல்,பிரசன்னாமற்றும்போலீசார்வேல்முருகன்,உதயகுமார் ஆகியோர்இன்று அதிகாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பண்ருட்டி திருவதிகை கெடிலம் ஆற்றுப்பகுதியில் 2மாட்டுவண்டியில்அரசு அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் கடத்தியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட திருவதிகை குட்ட தெரு கணபதி(64),பண்ருட்டி ெரயில்வே காலனிமகாலிங்கம்(55) ஆகியோர் மீதுவழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து அவர்கள் ஒட்டி வந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.