என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேவாரத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
- போலீசார் சின்ன தேவியம்மன் கண்மாய் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
- 5 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் தேவாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தெய்வக்கண்ணன் தலைமையிலான போலீசார் சின்ன தேவியம்மன் கண்மாய் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் 5 கிலோ கஞ்சா வைத்திருந்ததும், இதனை விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தேவாரம் பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சதீஸ்குமார் (37), சுகேந்திரன் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் மோட்டர் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக தேவாரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி கவிதாவை போலீசார் தேடி வருகின்றனர். சுகேந்திரன் மீது ஏற்கனவே பல்வேறு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் கவிதா மீதும் கஞ்சா கடத்திய வழக்குகள் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்