search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் போதை காளான் விற்ற 2 பேர் கைது
    X

    கோப்பு படம்.

    கொடைக்கானலில் போதை காளான் விற்ற 2 பேர் கைது

    • 2 பேரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்று வந்தது தெரிய வந்தது.
    • 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த போதை காளான் கைப்பற்றப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மேல்மலை பகுதியில் போதை காளான் விற்பதாக கிடைத்த தகவலை அடுத்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூண்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் மயிலாடுதுறையை சேர்ந்த ராஜாராமன் மகன் நிஷாந்த் (வயது 22), கொடைக்கானல் மேல் மலை பூண்டி பகுதியைச் சேர்ந்த பேச்சியப்பன் மகன் தமிழ்ச்செல்வன் (30) என்பதும் 2 பேரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்று வந்தது தெரிய வந்தது.

    இது பற்றி கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து நிஷாந்த், தமிழ் செல்வன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த போதை காளான் கைப்பற்றப்பட்டது.

    Next Story
    ×