search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டி உள்பட 2 பேர்  விஷம் குடித்து தற்கொலை
    X

    மூதாட்டி உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை

    • வெள்ளையம்மாள் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோத எலிமருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த வீரப்பநாய்க்க ன்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது60). இவருக்கு பக்கவாதம் நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த காணப்பட்ட வெள்ளையம்மாள் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோத எலிமருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சகை்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த அரூர் போலீசார் உடனே அங்கு விரைந்து வெள்ளையம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோன்று தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தும்பலஅள்ளி கிராமத்தில் உள்ள இலங்கை அகதி முகாமைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது37). டிரைவர். இவரது மனைவி சிந்தினி (36).

    கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த காணப்பட்ட ராஜ்குமார் கடந்த 16-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனே தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×