search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் சாவு
    X

    வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் சாவு

    • கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
    • இதில் அவருக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தார்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் கருணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன். இவரது மகன் கீர்த்திவாசன் (வயது 22). இவர் நேற்று இரவு கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தார். இது குறித்து தகவல் அறிந்து கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கீர்த்தி வாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல சேலம் சுக்கம்பட்டி வலசையூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி பவுனம்மாள் ( 55). இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு திரும்பி வீட்டிற்கு சின்னானூர் அருகே வந்தபோது துரைசாமி திடீரென பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இருவரும் காயம் அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். இதில் பவுனம்மாள் சிகிச்சை பலனின்றி இரவு பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×