வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு

சம்பவத்தன்று அவர் பெங்களூரு-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது.
வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு
Published on

கிருஷ்ணகிரி,

திருச்சி மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் முத்து (வயது55). கட்டிட மேஸ்திரியான இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் பெங்களூரு-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட முத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஓசூர் சிப்காட் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து முத்துவின் உடலை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோன்று தெலுங்கனா மாநிலம் வராங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கொரண்ட பத்ரய்யா (52). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சோமநாதபுரம் பகுதியில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசியநெடுஞ்சாலை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கொரண்டபத்ரய்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com