பழனி அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற 2 பேர் கைது

மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் அவ்வழியாக நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பழனி:

பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி தனியார் மில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் அவ்வழியாக நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். அந்தபெண் சத்தம் போடவே அருகில் இருந்த பொதுமக்கள் அந்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர்.

ஆனாலும் அவர்கள் பைக்கில் சென்றபோது பொதுமக்கள் துரத்திச் சென்று மாவட்ட எல்லையான ெகாழுமத்தில் 2 பேரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.பின்னர் இது குறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டது கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த காதர் மகன் நியாஸ்தீன் (வயது33), காதர் அலி மகன் உமர்முக்தார் பாரூக் (26) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் இதற்கு முன் வேறு யாரிடமாவது வழிப்பறி செய்துள்ளார்களா? இக்கும்பலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com