நிலக்கோட்டை அருகே அரசு பஸ்சை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டல் - 2 பேர் கைது

பஸ்சுக்குள் ஏறிய வாலிபர்கள் திடீரென கத்தியை காட்டி பணம் கேட்டு டிரைவரிடம் தகராறு செய்தனர். பயணிகள் சத்தம்போட்டதால் தப்பி ஓடினர்.புகாரின்பேரில் போலீசார் வாலிபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஒட்டுப்பட்டியைச் சேர்ந்த ஜெயகாந்தி (வயது 50). இவர் திண்டுக்கல் அரசு பஸ் டிப்போவில் டிரைவ ராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு நில க்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது செங்கோட்டை பிரிவு அருகே 2 வாலிபர்கள் அரசு பஸ்சை வழிமறித்தனர். அவர்கள் பஸ் ஏறுவதற்காக த்தான் கையை காட்டுகின்ற னர் என்று நினைத்து பஸ்சை நிறுத்தினார். பஸ்சுக்குள் ஏறிய அவர்கள் திடீரென கத்தியை காட்டி பணம் கேட்டு டிரைவரிடம் தகராறு செய்தனர். இதனால் அங்கிருந்த பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சத்தம் போட்டனர்.

இதனால் அந்த 2 வாலிபர்களும் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்க ட்ராஜிடம் டிரைவர் ஜெய காந்தி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். விசாரணையில் அவர்கள் செங்கோட்டை யைச் சேர்ந்த இமானுவேல் (29) அஜய்குமார் (22) ஆகிேயார் என தெரிய வந்தது.

இதனைத் தொட ர்ந்து சப் இன்ஸ்பெக்டர் அருண்பிர சாத் தலைமை யிலான போலீசார் செங்கோ ட்டைக்கு விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் திண்டு க்கல் சிறையில் அடைக்கப்ப ட்டனர். அரசு பஸ்சிலேயே பயணிகள் இருக்கும் போது கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com