search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் முதியவரை தாக்கிய 2 பேர் கைது
    X

    நெல்லையில் முதியவரை தாக்கிய 2 பேர் கைது

    • ராஜா தனது உறவினர்களான அழகனேரியை சேர்ந்த சங்கர் உள்ளிட்ட சிலரை வரவழைத்து மனோவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
    • இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அவர்களை சமரசம் செய்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பை அடுத்த தச்சநல்லூர் அருகே உள்ள கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் மனோ (வயது21). அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் ராஜா (21) ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் ராஜா தனது உறவினர்களான அழகனேரியை சேர்ந்த சங்கர் உள்ளிட்ட சிலரை வரவழைத்து மனோவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (60) என்பவர் அவர்களை சமரசம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா உள்ளிட்ட 7 பேர் அவரை கட்டையால் அடித்து தாக்கினர். இதில் காயமடைந்த அவர் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை தாக்கிய இசக்கிராஜா, உச்சிமாகாளி, பாலாஜி, விக்னேஷ், சுந்தர், இசக்கி, பால்துரை ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதில் இசக்கிராஜா, உச்சிமாகாளி ஆகிய 2 பேரை இன்று போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×