ஈரோடு மாநகரில் 2 நாட்களில் 190 டன் குப்பைகள் அகற்றம்

ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சேரும் மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து வருகின்றனர். வழக்கமான நாட்களில் 70 டன் வரை குப்பைகள் சேரும் நிலையில் இந்த 2 நாட்களில் மட்டும் 190 டன் வரை குப்பைகள் சேர்ந்துள்ளன.
ஈரோடு மாநகரில் 2 நாட்களில் 190 டன் குப்பைகள் அகற்றம்
Published on

ஈரோடு:

ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சேரும் மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

இவ்வாறு மாநகர் பகுதியில் நாள் ஒன்றுக்கு 70 முதல் 75 டன் வரை குப்பைகள் சேருகின்றன. இவற்றை தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையடுத்து மாநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். இதனால் கடந்த 24 மற்றும் 25ஆம் தேதி ஆகிய 2 நாட்களில் மாநகர் பகுதியில் பட்டாசு கழிவுகள் மலை போல் குவிந்தன.

இந்த பட்டாசு குப்பை கழிவுகளை அகற்ற நான்கு மண்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். வழக்கமான நாட்களில் 70 டன் வரை குப்பைகள் சேரும் நிலையில் இந்த 2 நாட்களில் மட்டும் 190 டன் வரை குப்பைகள் சேர்ந்துள்ளன. அதனை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com