18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்- அ.தி.மு.க.வினருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

சிறப்பு முகாம்கள் வருகிற 4 மற்றும் 5-ந் தேதியும், 18 மற்றும் 19-ந் தேதியும் நடைபெறும். வாக்குச்சாவடிகளுக்கென்று நியமிக்கப்பட்டுள்ள, வாக்குச்சாவடி நிலைமுகவர்களும் தனிகவனம் செலுத்த வேண்டும்.
18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்- அ.தி.மு.க.வினருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்
Published on

கோவை,

வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியானவர்களை சேர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்

எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள் வருகிற 4 மற்றும் 5-ந் தேதியும், 18 மற்றும் 19-ந் தேதியும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த முகாம்களில் கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய நகர பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வார்டு, கிளை கழக செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கென்று நியமிக்கப்பட்டுள்ள, வாக்குச்சாவடி நிலைமுகவர்களும் தனிகவனம் செலுத்த வேண்டும்.

18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாதவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், மற்றும் இறந்தவர்களின் பெயர்களை தற்போது உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தம் செய்வதற்கும், தேவையான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அதனை சம்பந்தப்பட்ட முகாம்களில், வழங்கி இந்த பணியை சிறப்பாக செய்து முடித்து தகவல்களை கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com