search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி அரசு கலைக் கல்லூரியில்  17-ந் தேதி 2-ம் கட்ட கலந்தாய்வு
    X

    செஞ்சி அரசு கலைக் கல்லூரியில் 17-ந் தேதி 2-ம் கட்ட கலந்தாய்வு

    • செஞ்சி அரசு கலைக் கல்லூரியில் 17-ந் தேதி 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
    • விவரங்களை கல்லூரியின் விளம்பர பலகையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    விழுப்புரம்:

    செஞ்சியில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு நடைபெறுகிறது. அதற்காக முதற்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் தற்போது மீண்டும் 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து கல்லூரியின் முதல்வர் ரவிசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. அன்று பி.ஏ. ஆங்கில பிரிவுக்கும் 18 ஆம் தேதி பி.எஸ். சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கும் 22-ந் தேதி தேதி பி.காம், பி.பி.ஏ. ஆகிய பிரிவுகளுக்கும் 23ஆம் தேதி பி.ஏ தமிழ் பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது, மேலும் விவரங்களை கல்லூரியின் விளம்பர பலகையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×