search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1,750 பேர் அமர்ந்து போட்டிகளை பார்க்கலாம்:  ரூ. 15 கோடியில் புதுப்பிக்கப்பட்ட  பாளை வ.உ.சி. மைதானம் - மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்
    X

    வ.உ.சி. மைதானத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படும் கேலரிகள்.

    1,750 பேர் அமர்ந்து போட்டிகளை பார்க்கலாம்: ரூ. 15 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பாளை வ.உ.சி. மைதானம் - மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

    • நெல்லை மாநகரப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ. 965 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.
    • ரூ. 15 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பாளை வ.உ.சி. மைதானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு நாளை நெல்லையில் நடைபெறும் விழாவில் திறந்து வைக்க உள்ளாார்.

    நெல்லை:

    நெல்லை மாநகரப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ. 965 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.

    புதிய பஸ்நிலையம்

    இதில் 32 திட்டப்பணிகள் ரூ. 319.02 கோடி மதிப்பீட்டில் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளன. 52 திட்டப்பணிகள் ரூ. 642.98 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

    அந்தவகையில் கூடுதல் நடைமேடைகளுடன் கட்டப்பட்ட நெல்லை வேய்ந்தான்குளம் புதிய பஸ்நிலையம், முழுவதும் இடித்து புதிதாக அமைக்கப்பட்ட பாளை பஸ் நிலையம், நவீன பஸ்நிறுத்தங்கள் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

    ரூ. 79 கோடி

    ரூ. 79 கோடியில் கட்டப்பட்டு வரும் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தின் ஒருபகுதி வேலை முடிந்த நிலையில் மற்றொரு பகுதியின் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதுபோல டவுன், பாளை மார்க்கெட்டுகள் புதுப்பிக்கும் பணி, பொருட்காட்சி மைதானத்தில் வணிக வளாகம் கட்டும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    வ.உ.சி. மைதானம்

    இந்நிலையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பாளை வ.உ.சி. மைதானத்தில் பல்வேறு வசதியுடன் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து பாளை வ.உ.சி. மைதானத்தில் ஏற்கனவே இருந்த கேலரிகள், பார்வையாளர்கள் கூடம், விளையாட்டு வீரர்கள் அறைகள் ஆகியவை இடித்து அகற்றப்பட்டது.

    நவீன இருக்கைகள்

    பின்னர் நவீன இருக்கைகள் மற்றும் மேற்கூரைகளுடன் கூடிய கேலரிகள் புதிதாக அமைக்கப்பட்டன. புதிதாக அமைக்கப்பட்ட கேலரிகளில் அதிகபட்சமாக 1,750 பேர் அமர்ந்து போட்டிகளை பார்க்க முடியும். 24 வி.ஐ.பி.க்கான இருக்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

    320 சதுர அடியில் பிரமாண்ட மேடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வி.ஐ.பி.க்கள், விளையாட்டு வீரர்களுக்கு 2 தனித்தனி அறைகள் கட்டப்பட்டுள்ளது.

    தனித்தனியாக கழிவறை

    மேலும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சோலார் மின் உற்பத்தி விளக்கு, விளையாட்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க முதலுதவி அறைகள் உள்ளது.

    வ.உ.சி. மைதானத்தில் 6 உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இரவிலும் விளையாட்டு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.

    நடைப்பயிற்சி

    பொதுமக்கள் நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி மேற்கொள்ள தனித்தனி பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர வாகனம் நிறுத்தும் இடம், பார்வையாளர்களுக்கு சிறப்பு நுழைவுப்பாதை, முக்கிய நபர்கள் வருவதற்கு தனி நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. மைதானம் முழுவதும் சி.சி.டி.வி. காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    நாளை திறப்பு

    மேடையின் மேற்பகுதியில் சோலார் மின்உற்பத்தி தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த அரங்கிற்கு தேவையான மின்சாரத்தை இதில் இருந்தே உற்பத்தி செய்ய முடியும்.

    மேலும் விளையாட்டு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தும் வண்ணம் பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதனால் பாளை வ.உ.சி. மைதானம் முழுவதும் புதுப் பிக்கப்பட்டு புதுப்பொலி வுடன் காட்சி அளிக்கிறது. இதனால் நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    ரூ. 15 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பாளை வ.உ.சி. மைதானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு நாளை நெல்லையில் நடைபெறும் விழாவில் திறந்து வைக்க உள்ளாார்.

    Next Story
    ×