வெங்கடாம்பட்டி குளக்கரையில் 1,500 பனை விதைகள் விதைப்பு

பனை விதைகள் விதைப்பு பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா தலைமை தாங்கி தொடக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகைராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெங்கடாம்பட்டி குளக்கரையில்  1,500 பனை விதைகள் விதைப்பு
Published on

கடையம்:

தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி ஊராட்சியில் அனந்தபத்மநாயக்கன் குளக்கரையில், தளிர் திப்பணம்பட்டி கிராமம் அமைப்பு சார்பில் 1,500 பனை விதைகள் விதைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். ஊராட்சி வார்டு உறுப்பினர் தமிழ்ச் செல்வி, ஊராட்சி செயலர் பாரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் நிலக்கிழார் ரவிசுப்பிரமணியன், முத்துராமன், வெங்கடாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகைராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடு களை தளிர் அமைப்பின் ஒருங்கிணைப் பாளர்கள் சதீஷ்குமார், அனீத் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com