என் மலர்
உள்ளூர் செய்திகள்

15 வயது சிறுமி மாயம்
- உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
- போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த 16-ந்தேதி அன்று கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
Next Story






