தவறுதலாக வரவு வைக்கப்பட்ட 13 கோடி ரூபாய் - 100 பேரின் வங்கிக்கணக்குகளை முடக்கியது எச்.டி.எப்.சி.

தி.நகர் எச்.டி.எப்.சி. வங்கியில் இருந்து 100 வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.13 கோடி பணம் வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எச்டிஎப்சி வங்கி
எச்டிஎப்சி வங்கி
Published on

சென்னை:

சென்னை தி.நகரில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் 100 பேர் கணக்கில் ரூ.13 கோடி வரவு வைக்கப்பட்டதாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி சென்றது.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உடனே குறிப்பிட்ட 100 வங்கிக் கணக்கை அதிகாரிகள் தற்காலிகமாக முடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வங்கி சர்வரில் புதிய மென்பொருளை நிறுவியதே குளறுபடிக்கு காரணம் என தகவல் தெரியவந்துள்ளது. 

வாடிக்கையாளர்களின் பக்கத்தில் சில தகவல்களை அப்டேட் செய்யும்போது வரவு பக்கத்தில் குழப்பம் ஏற்பட்டு பணம் வரவு வைக்கப்பட்டதாகவும், சில கிளைகளில் இதுபோன்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. விரைவில் சரியாகும் என வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com