search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 127 கிலோ பறிமுதல்
    X

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 127 கிலோ பறிமுதல்

    • காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 127 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதனைத் தொடர்ந்து மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வணிக கடைகள் உள்ள பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்தார். அப்போது 127 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கும் படி ஊராட்சி செயலாளர் மொய்தீனிடம் ஊராட்சி மன்ற தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து 8 கடைக்காரர்களுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு ரூ.4 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

    Next Story
    ×