search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேகம் கண்காணிக்கும் கருவி உதவியுடன் கடந்த  2 ஆண்டுகளில் 10,200 வாகனங்களுக்கு அபராதம்
    X

    தொப்பூர் மலை பாதையில் 30 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தை கண்காணிக்கும் அளவீடும் கருவியை படத்தில் காணலாம்.

    வேகம் கண்காணிக்கும் கருவி உதவியுடன் கடந்த 2 ஆண்டுகளில் 10,200 வாகனங்களுக்கு அபராதம்

    • சிகப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கிய 143 வாகனங்களுக்கும் வாகன தணிக்கையின் பொழுது அபராதம் விதிக்கப்பட்டது.
    • அனுமதிச்சீட்டு இல்லாமல் இயக்கிய 82 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2023 முதல் ஜீன் 2023 வரை 6 மாதங்க ளில் போக்குவரத்து துறை யின் சார்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில், தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர் பாலக்கோடு பகுதி அலு வலக மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    அதில்,13500 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 3980 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக காலாண்டு வரி செலுத்தாமல் இயக்குதல், தகுதிச்சான்று, காப்புச்சான்று, புகை ச்சான்று புதுப்பிக்காமல் இயக்குதல், அனுமதிசீட்டு இல்லாமல் இயக்குதல் போன்ற குற்றங்களுக்காக 353 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டன.

    மேலும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக 140 வாக னங்களுக்கும், அதிகபாரம் ஏற்றிச்சென்ற 42 வாகனங்க ளுக்கும், அனுமதிச்சீட்டு இல்லாமல் இயக்கிய 82 வாகனங்களுக்கும், அதிவேக மாக வாகனங்களை இயக்கிய 2479 வாகனங்களுக்கும், தகுதி ச்சான்று பெறாமல் இயக்கிய 198 வாகனங்களுக்கும், காப்புச்சான்று, புகை ச்சான்று இல்லாமல் இயக்கிய 489 வாகனங்க ளுக்கும், சிகப்புநிற பிரதி பலிப்பான் இல்லாமல் இயக்கிய 256 வாகனங்க ளுக்கும் மற்றும் சிகப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கிய 143 வாகனங்களுக்கும் வாகன தணிக்கையின் பொழுது அபராதம் விதிக்கப்பட்டது.

    மேற்கண்ட வாகன சோதனையின் மூலமாக அரசுக்கு சாலை சரியாக ரூ.74,59,300- மற்றும் இணக்க கட்டணமாக ரூ.44,80,130 ஆக மொத்தம் ரூ.1,19,39,480 உடனடியாக வசூலிக்கப்பட்டது.

    மேலும், இந்த வாகன சோதனை மூலம் பல்வேறு குற்றங்களுக்கு இணக்க கட்டணமாக ரூ.57,86,785 நிர்ணயம் செய்யப்பட்டது.

    கடந்த ஆறு மாதங்களில் தருமபுரி வட்டார போக்கு வரத்து அலு வலகத்தின் சார்பாக அரசுக்கு மொத்தம் ரூ.1,77,26,265 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    மேலும், தொப்பூர் மலைப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பான 30 கி.மீ. மேல் இயக்கப்படும் வாக னங்களுக்கு போக்கு வரத்துதுறை சார்பில் வேகம் கண்காணிக்கும் கருவி உதவியுடன் கடந்த 2 ஆண்டுகளில் 10,200 வாகனங்களுக்கு இ-செல்லான் மூலம் ரூ.69,98,525-அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×