search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் அருகே ரூ.10 லட்சம்   புகையிலை பொருட்கள் பறிமுதல்
    X

    சேலம் அருகே ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

    • மேச்சேரி பகுதியில் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
    • அட்டைப் பெட்டிகளில் 11/2 டன் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அதிகாலையில், மேச்சேரி காமனேரி அருகே, அந்த வழியாக வந்த சரக்கு வேனை மடக்கி பிடித்து சோதனை செய்தார்.

    இதில், அட்டைப் பெட்டிகளில் 11/2 டன் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

    வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் ராஜஸ்தான் மாநிலம் அர்பாலியா பகுதியைச் சேர்ந்த பவன் தேவ்சோட் (வயது24) என்பதும், பெங்களூரில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×