search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே கொட்டகையில்  10 ஆடுகள் திருட்டு
    X

    திண்டிவனம் அருகே கொட்டகையில் 10 ஆடுகள் திருட்டு

    • திண்டிவனம் அருகே கொட்டகையில் 10 ஆடுகள் திருடப்பட்டது.
    • திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பம் (நங்குணம்) பகுதியை சேர்ந்தவர் திருமலை (வயது 50). விவசாயி.இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகின்றார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பம் (நங்குணம்) பகுதியை சேர்ந்தவர் திருமலை (வயது 50). விவசாயி.இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகின்றார்.

    இவர் நேற்று வழக்கம்போல் தனது ஆடுகளை கொட்டகையில் கட்டிவிட்டு தூங்கச சென்றார். பின்பு நள்ளிரவில் கொட்டகையிலிருந்த ஆட்டை பார்த்தபோது, 10 ஆடுகளை திருடப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனம் அருகே கொட்டகையில் கட்டி வைக்கப்பட்ட விவசாயி ஒருவரது 10 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 75 ஆயிரம் ஆகும்.

    Next Story
    ×