search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே லாரியில் கடத்தி சென்ற 1 டன் இரும்பு பறிமுதல்
    X

    கடலூர் அருகே லாரியில் கடத்தி சென்ற 1 டன் இரும்பு பறிமுதல்

    • கடலூர் அருகே லாரியில் கடத்தி சென்ற 1 டன் இரும்பு பறிமுதல் செய்யப்பட்டது.
    • இரும்பு எங்கிருந்து வந்தது என விசாரித்த போது திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் அருகே சிந்தாமணிக் குப்பம் பகுதியில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது 1 டன் இரும்பு இருந்தன. பின்னர் இரும்பு எங்கிருந்து வந்தது என விசாரித்த போது திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது வாகனத்தில் இருந்த லாரியில் இருந்து நபர்கள் திடீரென்று தப்பி ஓடினார்கள். உஷாரான போலீசார் அவர்களை துரத்தினர். ஆனால் அவர்களை பிடிக்க சென்றபோது பிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து லாரி மற்றும் இரும்பு ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×