search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே  1 லட்சம் பனை விதை நடும் பணி- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    விழாவில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்தபடம்.

    விளாத்திகுளம் அருகே 1 லட்சம் பனை விதை நடும் பணி- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • குளத்தூரில் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக 1-லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணி நடந்தது.
    • விழாவில் பனைமரத்தில் விளையும் பொருட்களால் ஆன கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் குளத்தூரில் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக 1-லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    விழாவில் பனைமரத்தில் விளையும் பொருட்களால் ஆன கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதில் நுங்கு, பண ஓலையினால் செய்யப்பட்ட கொழுக்கட்டை, என கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பொருட்கள் அனைத்துதரப்பினைரையும் கவர்ந்தது.

    இந்த நிகழ்வில் வட்ட வளர்ச்சி அலுவலர் தங்கவேல் குளத்தூர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, வேளாண்மை உதவி இயக்குனர் கீதா, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், ஊராட்சி மன்ற தலைவர் மாலதி, மாவட்ட குழு உறுப்பினர் மிக்கேல், நவமணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செந்தூர் பாண்டியன், ராஜேந்திரன், ராஜ் மாவட்ட பிரதிநிதி செல்வப்பாண்டி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பால்பாண்டி, ஒன்றிய அவைத் தலைவர் கெங்கு மணி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×