குழந்தைகளுக்கு இலவமாக டியூசன் கற்றுக்கொடுக்கும் மாற்றுத்திறனாளி பெண்

மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அறக்கட்டளை மூலம் பெண்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்றுக்கொடுப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கு இலவமாக டியூசன் கற்றுக்கொடுக்கும் மாற்றுத்திறனாளி பெண்
Published on

மதுரை:

மதுரையைச் சேர்ந்தவர் அமுதசாந்தி. சிறு வயது முதல் மாற்றுத்திறனாளியான இவர் படிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் அவரது பெற்றோர்களால் படிக்க வைக்க முடியவில்லை. தனது உறவினர்கள் உதவியால் சாந்தி ஆசரமத்தில் படித்து கல்லூரி படிப்பை முடித்தார்.

பின்னர், தியாகம் பெண்கள் அறக்கட்டளை மூலம் பெண்களுக்கு இலவசமாக தொழிற்பயிற்சி வழங்கினார். இதனால் ஏராளமான பெண்கள் பயனடைந்தனர். மேலும், தனது கல்வியை மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும் என எண்ணினார். இதையடுத்து மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாக டியூசன் அளித்தார்.

9 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கிராமப்புறக்களில் உள்ளவர்கள் கல்வி குறித்து விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுத்து வருகின்றனர். குழந்தை திருமணம் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com