கடலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

அடையாள அட்டை புதுப்பிக்ககோரி கடலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு 20-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
Published on

கடலூர்:

மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டையை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பித்து கொள்வார்கள். தற்போது அரசு டாக்டர்கள் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்ககோரி எந்தவித மருத்துவ முகாம்களிலும் கலந்து கொள்ளவில்லை.

இதனால் கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தங்களுக்கு மருத்துவ சான்றிதழ் பெறமுடியாததால் அடையாள அட்டையை புதுப்பித்துக் கொள்ள முடியவில்லை.

இதனை கண்டித்து இன்று மாற்றுத்திறனாளிகள் 20-க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அங்கு அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அடையாள அட்டை புதுப்பித்து தரக்கோரி கோ‌ஷம் எழுப்பினர்.

தகவல் அறிந்த அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com