தேவகோட்டை அருகே வீடு புகுந்து நகை திருட்டு

தேவகோட்டை அருகே வீடு புகுந்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

காரைக்குடி:

தேவகோட்டை ரஸ்தா அருகே உள்ள நாகவயல் சாலையில் வசித்து வருபவர் தீபன். இவர் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து வாசல் அருகில் தூங்கி உள்ளார். அப்போது வீட்டுக்குள் சத்தம் கேட்டு விழித்தபோது மர்மநபர் தப்பி ஓடினான். அவனை விரட்டிப் பிடிக்க முயன்றும் முடியவில்லை. பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை திருடுபோய் இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com