

அதன்பின் வந்த நிதிஷ் ராணா 68 ரன்களும், தினேஷ் கார்த்திக் 32 ரன்களும், கேதர் ஜாதவ் 41 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் குவித்தது.
பின்னர் 294 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘சி’ அணியின் ரகானே, அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரகானே 14 ரன்னிலும், முகுந்த் 37 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 2 ரன்னிலும் வெளியேறினார்கள்.
இதனால் இந்தியா ‘சி’ அணி 85 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இஷான் கிஷான் 60 பந்தில் 69 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது. 5-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ஷுப்மான் கில் சதம் அடித்தார்.
இஷான் கிஷான்