

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
இவ்வழக்கு வரும் 6-ம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில் இவ்விவகாரத்தில் தொடர்புடையை மனோஜ் அரோரா தன்னை கைது செய்வதில் இருந்து தடை உத்தரவு பெற்றார்.
இதே கோரிக்கையுடன் ராபர்ட் வதேராவின் வழக்கறிஞரும் முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது வரும் 6-ம் தேதி நடைபெறும் விசாரணையில் ராபர்ட் வதேரா கலந்து கொள்வார். அவருக்கு முன் ஜாமின் அளிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் வாதாடினார்.
இதனையேற்ற நீதிமன்றம் வரும் 16-ம் தேதி ராபட் வதேராவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #RobertVadra #PatialaHouseCourt #interimprotection