

டெல்லி மாநிலம் முழுவதும் வருகிற 16-ந் தேதி முதல் இணையதள வசதி பெறுவதற்காக இலவச ‘வைபை’ வசதி திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்காக மொத்தம் 11 ஆயிரம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்படுவதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.