அமெரிக்காவில் காந்தி சிலையை சேதப்படுத்தியது அவமானம் -டிரம்ப்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இந்திய தூதரகம் அருகே மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது அவமானகரமானது என அதிபர் டிரம்ப் கூறினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப்
Published on

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாஷிங்டனில் இந்திய தூதரகம் அருகே உள்ள மகாத்மா காந்தி  சிலையை கடந்த 2ம் தேதி இரவில் மர்ம நபர்கள் சேதப்படுத்தி அவமதித்தனர். இந்த செயலுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனமும், வருத்தமும் தெரிவித்தனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்  வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பின்போது, காந்தி சிலை சேதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சுருக்கமாக பதிலளித்த ட்ரம்ப், சிலையை சேதப்படுத்தியது ‘அவமானம்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com