கடன் பிரச்சினையால் தொழில் அதிபர் தற்கொலை? - போலீசார் விசாரணை

ஈரோட்டில் தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடன் பிரச்சினையால் தொழில் அதிபர் தற்கொலை? - போலீசார் விசாரணை
Published on

ஈரோடு:

ஈரோடு பூசாரி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 45). சொந்தமாக கார்மெண்ட்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி கோமதி (35). இவர்களுக்கு திருமணமாகி 20 வருடம் ஆகிறது. குழந்தையில்லை.

மேலும் நாராயணனுக்கு கடன் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் நாராயணன் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கோமதி வெளியே சென்று விட்டார். வீட்டில் நாராயணன் மட்டும் தனியாக இருந்துள்ளார். பின்னர் கோமதி வீடு திரும்பி வந்து பார்த்த போது நாராயணன் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து நாராயணன் உடலை மீட்டு கிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் நாராயணன் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

நாராயணன் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்று தெரியவில்லை.

இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com