மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
Published on

பண்ருட்டி

பண்ருட்டி அருகே உள்ள சி.என்.பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 34). இவரது நண்பர் பெரியசாமி. சம்பவத்தன்று பெரியசாமி மோட்டார் சைக்கிளில் சண்முகசுந்தரம் மற்றும் அவரது பாட்டி யசோதை (70) ஆகியோரை ஏற்றிக்கொண்டு மேல்மாம்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து யசோதை தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார். 

இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com