விபத்தில் இறந்த மகன் - ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் தோள்களில் தூக்கிச் சென்ற தந்தை

பீகார் மாநிலத்தில் விபத்தில் இறந்த 11 வயது சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தர மறுத்ததால், சிறுவனின் தந்தை அவரை தோளில் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Bihar
விபத்தில் இறந்த மகன் - ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் தோள்களில் தூக்கிச் சென்ற தந்தை
Published on

பீகார் மாநிலம் நாலந்தா பகுதியில் நேற்று 11 வயது சிறுவன் வாகன விபத்தில் காயம் அடைந்தான். அப்போது அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தும் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தனது மகன் இறந்த செய்தி கேட்ட சிறுவனின் தந்தை கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com