புரோ கபடி லீக்-நடப்பு சாம்பியன் பெங்களூருவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது டெல்லி

குஜராத்தில் நடைபெற்ற புரோ கப்டி லீக் தொடரின் முதல் அரையிறுதியில் பெங்களூரு புல்சை வீழ்த்தி தபாங் டெல்லி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பெங்களுரு வீரரை மடக்கும் டெல்லி அணியினர்
பெங்களுரு வீரரை மடக்கும் டெல்லி அணியினர்
Published on

புரோ கபடி லீக் தொடரில் முதல் அரையிறுதி போட்டி குஜராத்தில் இன்று நடைபெற்றது. இதில் தபாங் டெல்லி மற்றும் நடப்பு சாம்பியனான பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே டெல்லி அணி வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகளை குவித்தனர். இதனால் முதல் பாதியில் 26-18 என டெல்லி அணி முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் பெங்களூரு புல்ஸ் அணியினர் தொடர்ந்து புள்ளிகளை எடுத்தனர். ஆனாலும் அவர்களால் டெல்லி அணிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

இறுதியில், தபாங் டெல்லி அணி 44-38 என்ற புள்ளி கணக்கில் பெங்களுருவை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com