

அதன்படி இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே, குசால் பெரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ரபாடா வீசினார். முதல் பந்திலேயே கருணாரத்னே டு பிளிசிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து குசால் பெரேரா உடன் அவிஷ்கா பெர்னாண்டோ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இலங்கை அணி 9.5 ஓவரில் 67 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. பெர்னாண்டோ 29 பந்தில் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து குசால் பெரேரா 34 பந்தில் 30 ரன்களில் வெளியேறினார்.